THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES

Wednesday, December 9, 2009

நான் பாடும் (இதயக்கோயில்)

நான் பாடும் மௌன ராகம்
கேட்கவில்லையா?
என் காதல் ராணி இன்னும்
தூங்கவில்லையா?
கண்ணீரில் உன்னைத்
தேடுகின்றேன்
என்னோடு நானே
பாடுகின்றேன்

உன்னைக் கண்டு தென்றலும்
நின்று போனதுண்டு
உன்னைக் காண வெண்ணிலா
வந்து போவதுண்டு
ஏன் தேவி என்னை நீ
இன்றுக் கொல்கிறாய்?
முள் மீது ஏனடி
தூங்கச் சொல்கிறாய்?
உன்னைத் தேடி தேடியே
எந்தன் ஆவி போனது
கூடு தானே இங்கு பாடுது
கூடு இன்று குயிலைத் தானே தேடுது

கண்கள் என்னும் சோலையில்
காதல் வாங்கி வந்தேன்
வாங்கி வந்த பின்புதான்
சாபம் என்று கண்டேன்
என் சாபம் தீரவே
நீயும் இல்லையே
என் சோகம் பாடவே
ராகம் இல்லையே
பூவும் வீழ்ந்து போனது
காம்பு என்ன வாழ்வது?
காலம் என்னைக் கேள்வி கேட்குது
கேள்வி இன்று
கேலியாகிப் போனது


Saturday, December 5, 2009

தீராதது (sena)

தீராதது
காதல் தீராதது
தீர்வாகுதே
உந்தன் பார்வைகளே
சுகமானது
காதல் இதமானது
தாலாட்டுதே உந்தன் சுமைகளுமே
உந்தன் அழகே என்னை
தினம் தொழு வைத்தது
உந்தன் நினைவே என்னை
தினம் சிறை வைத்தது
உந்தன் நெருக்கம் கொண்ட
ஆடை மீது கோபம்

தலையில் சீப்பை
சொருகிக் கொண்டு
தேடுவதை போல
உன்னை அருகில்
வைத்துக் கொண்டே
தேடுகிறேன்
எங்கே போனாய்?
இத்தனை நாளாய்
கனவில் நீயும் இல்லை
தினமும் தேடி
இமைகள் மூடிக்
கரைந்தேனே
காதல் கதவை நீயும்
கண்ணே மூடிக் கொண்டால்
காற்றாய் நானும் மாறி
ஜன்னல் வழியாய் வருவேன்
அந்த மூடியக் கதவில்
காற்றும் வருதே
உணர்ச்சிகள் இவைதானே

என்னைக் கடந்து
செல்லும் போது
எனக்குள் ஏதோ செய்தாய்
என்னைக் கடத்தி
ஏன்தான் நீயும்
சென்றாயோ?
என்னைப் பற்றி
நிதமும் ஏதோ
நினைக்கத்தானே செய்தாய்
பொய்யும் இல்லை
விக்கல் வந்து
சொல்கிறதே
உன்னைத் தேடிச் செல்ல
இரவே பகலானது
கண்கள் ஏதோ சொல்ல
கண்ணீர் தேனானது
எந்தன் மனசுக்குள்ளே
மறைந்திருந்தாயே
அலைந்தது நான்தானே