கல்லை மட்டும் கண்டால்
கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால்
கல்லடி தெரியாது
எட்டில் ஐந்து எண் கழியும்-என்றும்
ஐந்தில் எட்டு ஏன் கழியாது?
அஷ்ட ஆட்சரம் ஏற்கும் நெஞ்சு
பஞ்ச ஆட்சரம் பார்க்காது
மூடர்க் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான்
ஞானக் கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம் தான்
இல்லையென்று சொன்ன பின்பும் இன்றியமையாது
தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது
வீர சைவர்கள் முன்னால் எங்கள் ஈர வைணவம் தோற்காது
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கில் சூரியன் உதிக்காது
ராஜ லட்சுமி நாயகன் ஸ்ரீனிவாசன் தான்
ஸ்ரீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் நான்
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜர் தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்
நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது
வீசும் காற்று வந்து விளக்கணைக்கும்
வெண்ணிலாவை அது அணைத்திடுமா??
கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்
அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா??
சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது
தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது
Saturday, November 7, 2009
கல்லை மட்டும் (தசாவதாரம்)
Posted by pavi at 9:33 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment