THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES

Saturday, November 14, 2009

ஏனோ ஏனோ (ஆதவன்)

ஏனோ ஏனோ
பனித்துளி பனித்துளி மண் மேலே
தேனோ பாலோ
எரியுது எரியுது தீ போலே
மேலும் உள்ளம்
உருகுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே
நெஞ்சுக்குள்ளே போனாய்
நீ போனாய்
என் நெஞ்சம் ஏனோ மெத்தை தானா
கூறாய் நீ கூறாய்
உன்னை பூட்டிக் கொண்டாயே
வாராய் வெளி வாராய்
இனி என்னை விட்டு எங்கும் செல்ல மாட்டாய்
மாட்டாய் மாட்டாயே

மௌனம் என்னும் சாட்டை வீசி என்னைக் கீறாதே
மாலைத் தென்றல் பட்டால் கூடக் காயம் ஆறாதே
அக்கம் பக்கம் யாரும் இல்லை
வா என் பக்கம்
தேடல் கொஞ்சம்
ஊடல் கொஞ்சம்
நீ யார் பக்கம்?
ஏதோ ஒன்று
என்னைத் தள்ள
நதிகளின் ஓரம் நாணல் போலே நானும் சாய்ந்தேன்
உன்னை மட்டும்
எண்ணி எண்ணி
நிலவைப் போல நீயில்லாமல் தேய்ந்தேன்

நானும் நீயும் பேசும்போது தென்றல் வந்ததே
பேசிப் போட்ட வார்த்தை எல்லாம் அள்ளிச் சென்றதே
சேலை ஒன்றும்
மாலை ஒன்றும்
வாங்கி வந்தாயா?
செய்தி நல்ல செய்தி சொன்னால் வேண்டாம் என்பாயா?
திரும்பிய பக்கம் எல்லாம் நீதான் நின்றாய்
காற்றைப் போலே
தொட்டு தொட்டு
தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே சென்றாய்


0 comments: